Wednesday 21 December 2011

கமலுக்கு தேசியவிருது கிடைத்தது எப்படி? பாலுமகேந்திரா ருசிகரம்!

மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவி சிறப்பாக நடித்திருந்தும், கமல்ஹாசனுக்கு தேசிய விருது கிடைத்தது எப்படி? என்பது பற்றி டைரக்டர் பாலுமகேந்திரா ருசிகர தகவலை வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் மணா எழுதிய `கமல் நம் காலத்து நாயகன் என்ற புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. புத்தகத்தை டைரக்டர் பாலுமகேந்திரா வெளியிட, பட்டிமன்ற நடுவர் கு.ஞானசம்பந்தன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் டைரக்டர் பாலுமகேந்திரா, கமல்ஹாசனைப் பற்றி பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அவர் பேசுகையில், "மூன்றாம் பிறை படத்தின் கதையை முதலில் ஸ்ரீதேவியிடம்தான் கூறினேன். அதைக் கேட்டவுடன், அவர் உருகி அழத்தொடங்கி விட்டார். பிறகு கமல்ஹாசனிடம் கதையை சொன்னேன். "எனக்கு இது சரிப்பட்டு வருமா? என்று கமல் முதலில் சந்தேகப்பட்டார். "நிச்சயமாக இது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று சொல்லி சம்மதிக்க செய்தேன். அந்த படம், கதாநாயகியை மையமாக கொண்ட படம் என்பதால், எல்லா காட்சிகளிலும் ஸ்ரீதேவியே வருவார். படத்தில் அவர் பிரமாதமாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

கமல், ஸ்ரீதேவியுடன் தோன்றுகிற காட்சிகளில் எல்லாம், "நீங்கள் நடிக்க முயற்சிக்காதீர்கள். இயல்பாக இருங்கள் என்று கமலிடம் சொன்னேன். அவரும் அதை அப்படியே செய்தார். மலையில் இருந்து கொட்டுகிற அருவி, பாறையின் மீது பட்டுத் தெறிக்கும்போது, தோன்றும் அழகே தனிதான். அதுபோல் கொட்டுகிற அருவியாக ஸ்ரீதேவி இருந்தார். பட்டுத் தெறிக்கிற பாறையாக கமல் இருந்தார். அதனால்தான் அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

கமல்ஹாசன் தேடல் உள்ள ஒரு அற்புதமான கலைஞர். ஆரம்ப காலங்களில், என்னிடம் எப்போதும் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பார். அவரிடம் இருக்கக்கூடிய நகைச்சுவை உணர்வு, எனக்கு மிகவும் பிடிக்கும். கமல்ஹாசனை நான் ஒரு ரசிகனாகவே பார்க்கிறேன். பட்டத்து இளவரசனுக்கு முடிசூடும்போது எப்படி நாடே மகிழுமோ, அதுபோல் அவரை பாராட்டுகிறபோது, நானும் மகிழ்கிறேன், என்றார்.

விழாவில், டைரக்டர் - நடிகர் பார்த்திபன் பேசும்போது, கமல் ஒரு பரிசோதனை கூடம் போன்றவர். திரைப்படத்தின் பல்வேறு கூறுகளை, தன்னை முன்னிலையாகக் கொண்டு பரிசோதித்து பார்ப்பவர். அவர் முதல் படத்துக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 250 ரூபாய்தான். அதில் இருந்து நாள்தோறும் வளர்ந்து, இன்றைக்கு இந்த உயர்வை எட்டியிருக்கிறார். அவரே ஒரு தொகுப்புதான். அவருக்கு ஒரு தொகுப்பு நூல் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில்  நடிகர்கள் சார்லி, சண்முகராஜா, நடிகை ரோகிணி, கவிஞர் நா.முத்துக்குமார், கு.ஞானசம்பந்தன் ஆகியோரும் கமலை பாராட்டி பேசினார்கள்.

Sunday 4 December 2011

" ஒரு நாள் ஒரு சந்திப்பு ..." பகுதி - 1 Tuesday, October 26, 2010


"இந்திய திரைப்படங்கள் பற்றிய ஆய்வு இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து நடந்தாலும் அதில் இவருக்கு தனி இடம் உண்டு " இப்படி தான் என் நண்பர் ஒருவர் இவரை பற்றி என்னிடம் அடிக்கடி சொல்லுவார்.

கற்பனைகள் கேமராவுக்குள் தஞ்சம் அடைய தொடங்கிய காலம் 19 ஆம் நூற்றாண்டு அதன் இறுதிப்பகுதியில் திரை ஒளிப்பதிவில், ஒரு தனி பாணியை வளர்த்தெடுக்க தொடங்கியவர் இவரின் முன்றாவது கண்களுக்குள் நுழைந்தவர்கள் உலகப்புகழ் பெற்றார்கள் விருதுகள் வாங்கி குவித்தார்கள்.

ஒருவர் தற்காலத்தில் எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம், படத்தொகுப்பு என்கிற இந்த நான்கு துறைகளிலும் நல்ல அறிமுகம் உள்ளவராய் இருப்பதே அரிது. ஆனால் அதில் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்தவர் இவர். இவருடைய படங்கள் வசூலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது நிதர்சனம், இயற்கையை அழகாய் திரையில் வடித்த இவர் கருத்திலும் குறை வைக்கவில்லை. விருதுகள் தாண்டி பல கலைஞர்கள் கைபிடித்து எழும்ப
விழுதுகளாய் இருந்தவர்.



கிட்டத்தட்ட 72 வயது இன்னமும் தனது 26 ஆவது படத்தை பற்றி அவர் பேச தொடங்கியது திரை துறையில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவரிடமும் இருந்தால் உலக சினிமா வரலாறு இந்திய திரைப்படங்களும், இந்திய திரைக்கலைஞர்களும் இன்றியமையாது.( அது நிச்சயமாய் நனவாகும்! அந்த காலம் வெகுதூரமில்லை என்ற நம்பிக்கை இவரை சந்தித்து விடைபெறும்போது என் மனதில் திரும்ப திரும்ப தோன்றியது)

தமிழ் சினிமாவின் பிதாமகன்களின் ஒருவராக கருதப்படும் திரு.பாலுமகேந்திரா அவர்களை பற்றி சொல்லத்தான் இந்த சின்ன முன்னுரை.....



நான் இவர் படங்கள் அதிகம் பார்த்ததில்லை. ஆனால் இவர் படங்கள் பற்றி பல பேர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுதும் தொலைகாட்சிகளில், இவருடைய "முன்றாம் பிறை" போட்டால் கூட நகராமல் படம் பார்த்தவர்களையும் பார்த்திருக்கிறேன். நானும் அப்படி பார்த்திருக்கிறேன்.ஆம்! ஒரு கலைஞனின் படைப்பு எல்லா கால கட்டத்திலும் விரும்பப்படும் படியாக அமைவது மிக அரிது. அந்த வரிசையில் இவரின் பல படங்கள் இருப்பது இவரின் தனிச்சிறப்பு.




இன்று காலை நானும் என்னுடன் மக்கள் தொலைக்காட்சியில்
பணிபுரியும் நண்பர்கள் இருவரும் சேர்ந்து எங்கள் பத்து நிமிட கதைகள் ( இன்று பல தொலைக்காட்சியில் குறும்படங்களுக்காக ஒரு இடம் ஒதுக்கியிருக்கிறார்கள் ஆனால் முதலில் நாங்கள் தான் இப்படி ஒரு நிகழ்வை தொடங்கினோம்). நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் தேர்ந்தடுக்கப்படிருக்கும் படங்களில் பரிசுக்குரிய படங்களை தேர்வு செய்யும் படி கேட்க சென்னை சாலி கிராமம்,தசரதபுரம் போலீஸ் பூத் அருகில் இருக்கும் பாலுமகேந்திரா அவர்களின் "சினிமா பட்டறை"க்கு சென்றோம்.நான் இவரை சந்திப்பேன்.இவ்வளவு நேரம் உரையாடுவேன் என்றெல்லாம் நினைத்துப்பார்க்கவில்லை, ஆனால் நான் சின்ன வயதில் கண்ட கனவுகள் மட்டுமே எனக்கு இது போன்ற அறிய வாய்ப்புகளை கிடைக்கச் செய்கிறது என்பேன்.

நா எங்க அப்பாம்மா கை பிடித்து பொருட்காட்சிகளில் நடக்கத் தொடங்கிய காலங்களிலேயே அங்கே ஒலிபரப்பாகும் விளம்பர அறிவிப்புகளால் ஈர்க்கப்பட்டு அதே போல் பேச ஆரம்பித்த பழக்கம் தொடங்கி நான் வகுப்பில் பாட புத்தகத்தை வாசிக்க முதல் ஆளாக எழுவது வரை, போகிற வழியில் எல்லாம் சுவர் எழுத்துக்களை படித்துக்கொண்டே பயணித்தது வரை நான் ஒரு வானொலி தொகுப்பாளராய் ஆனதற்கும் அடித்தளம் இட்ட கனவுகள் பின் தொலைக்காட்சி துறை பணியில் இடம் பெற நினைத்தது, நடந்தது, இன்னும் திரைப்படம் நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த கனவு பயணத்தில் நான் 2009 பிப்ரவரியில் மக்கள் தொலைகாட்சியில் நுழைந்த பின் பல அருமையான சந்திப்புகள் எல்லா துறையிலும் பல மனிதர்களின் அனுபவ பகிர்வுகள். இனி என் வாழ்நாளில் நான் ஊடகம் அல்லது திரைத்துறை சார்ந்து இயங்க முடியாமல் போனால் கூட நினைத்து அசைபோடவும் ஒரு நல்ல ரசிகனாய் வாழவும் தகுதியடைய தொடங்கிவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்...

அதில் முக்கியமான நாள் இன்று.உள்ளே நுழைவதற்கு
முன்னேயே ஆயிரம் கேள்விகள் மனதில், சின்ன வயதில் இருந்தே கேள்விகள் கேட்டே பழக்கப்பட்டவன் ஆயிற்றே! முதலில் வரவேற்பறை சென்றோம் உள்ளே தகவல் சென்றதும் எங்களை அவருடைய தனி அறைக்கு அழைத்தார்.(அந்த அறை முழுக்க திரைப்படங்கள்.புத்தகங்கள், "உன் வாழ்வில் நீ நல்ல புத்தகங்களோடும், திரைப்படங்களோடும் அதிக நேரம் செலவழிக்க தொடங்கிவிட்டால் உன் வாழ்க்கை மிக அழகாகும்..". என்ற நான் எங்கோ எப்பொழுதோ படித்த
ஒரு ஆங்கில மேற்கோள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.)

பிடல் காஸ்ட்ரோ மேல் கொண்ட அபிமானத்தால் தலையில் நிரந்தரமாய் தங்கிவிட்ட தொப்பி (நீல நிறம் ),பனி படர்ந்தது போல் அடர்ந்த வெண் தாடி,நல்ல பெரிய முக்கு கண்ணாடி,கழுத்தில் கர்ச்சிப் வைத்து ஸ்கௌட் ஷ்கால்ப் போல் ஒன்றை கட்டியிருந்தார்.அதற்குள் அவர் முகத்தை என்னால் அடையாளம் காணவே முடியவில்லை..சாய்வு நாற்காலியில் அவர் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார். பொதுவாகவே நான் புகைப்படத்தில் ஒருவரை பார்ப்பத்தர்க்கும்,கான்பொளியில் பார்ப்பத்தர்க்கும்,அவரையே நேரில் பார்ப்பத்தர்க்கும் நெறைய வித்தியாசங்களை உணர்வேன், ஒரு புது பரிமானத்தில தெரிவாங்கனு கூட சொல்லலாம்.அதை இங்கேயும் உணர்ந்தேன்.

அப்பத்தான் அவர் மாணவர்களுக்கு காலை வகுப்பு முடிச்சுட்டு வந்துருந்தார், வணக்கம் சொல்லி உள்ளே நுழைந்தோம். உட்கார போன என்னை என் நண்பர் செய்கை காட்ட அந்த கம்பிர கலைஞனின் சம்மதத்திற்கு பிறகு அமர்ந்தோம். கோபக்காரர்,அப்புடி இப்பிடின்னு நெறைய பேர் சொல்லி கேள்விப்பட்டதால, அமைதியா இருந்தேன். அவர் பேசும் போது இருந்த ஒரு அமைதியும் நெருக்கமும் என்னை மடமடனு பேச வச்சுடுச்சு...

பாலுமகேந்திரா :- என்ன விசயம்?நான்:- இந்த பத்து நிமிட கதைகள் குறும்படங்கள நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் தேர்ந்தடுக்கப்படிருக்கும் படங்களில் பரிசுக்குரிய படங்களை நீங்க தான் தேர்ந்தடுக்கணும்.

பாலுமகேந்திரா :- நா எதுக்குப்பா எதாவது இளம் இயக்குனர் வச்சு தேர்ந்தேடுத்துக்ககூடாதா ?

நான்:- இல்ல நீங்க தான் தேர்ந்தடுக்கணும் இது தான் எங்க எல்லோருடைய விருப்பம்.

பாலுமகேந்திரா :- சரி ஆனா இன்னிக்கு குடுத்து நாளைக்கு வேணும்னு சொன்னா
என்னால முடியாது கொஞ்சம் நேரம் வேணும்னு சொன்னார் .


நான்:- கண்டிப்பா சார், பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை அதற்குள் கிடைத்தால் போதும்.

பாலுமகேந்திரா :- ம்... சரி நான் சனி,ஞாயிறு ரெண்டு நாளும் என்னோட அடுத்த பட நடிகர் தேர்வுக்காக நா திருவண்ணாமலை போறேன்,

தொடர்ந்து அவரே பேச தொடங்கினர் அவர் உதவியாளரை அழைத்து எங்களுக்கு தேநீர் கொண்டு வர சொன்னார் வந்தது "ப்ளாக் டீ" குடிப்பீர்களா என்று கேட்டார் (நான் சின்ன வயதில் இருந்தே டீ காபி எதுவும் குடிப்பதில்லை ப்ளாக் டீ குடித்த அனுபவம் இல்லை ஆனாலும் ஆம்! என்றேன் நன்றாகத் தான் இருந்தது.அவரே தொடர்ந்தார்.தன அடுத்த படத்திற்க்கான சில முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் (அது மீடியாக்களுக்கு தெரியாத விசயம் அதனால் பிரபலபடுத்தவில்லை) ஆச்சிரியம் இன்னும் அந்த ஆர்வம், அந்த படைப்புக்காக நானும் காத்திருப்பேன் .

நான்:-சார் கடைசியா என்ன படம் பார்த்திங்க?

பாலுமகேந்திரா:-அங்காடி தெரு படம் தான் பார்த்தேன் அந்த தீம் மிக அருமை, கதை வேறு தீம் வேறு வெளியூரில் இருந்து பிழைக்க வரும் இளைஞர்கள் பற்றிய ஒரு தீம் தேர்வு செய்தது ,சரி ஆனால் அந்த கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பின் சில நிறை குறைகளை பகிர்ந்து கொண்டார். என்ன ஒரு ஆழமான விமர்சனம்.நான்:-இப்ப நல்ல படங்களுக்கு திரைஅரங்கு கிடைக்குறதில நெறைய பிரச்சனைகள் இருக்கே ?

பாலுமகேந்திரா:- எஸ். நம்ம சினிமா இப்ப மோனோபோலி ஆயிடுச்சு. நா அதனால தான் என் மாணவர்களுக்கு உலக சந்தைய பார்க்க சொல்றேன். ஒரு ஜப்பான் படமோ, கொரிய படமோ, இந்திய ரசிகர்கள் வெறும் சப்-டைட்டில் துணையா வச்சு விரும்பி தேடி தேடி பார்க்குறோமே, நம்ம படங்கள அவங்கள பார்க்க வைக்க வேண்டாமா? எப்பவும் ஒரு மாற்று
வழி இருக்கும் சோ அத பாருங்க அப்புடினார்! வாவ் ! தட்ஸ் மாஸ்டர்....
நான்:-உங்க சினிமா பட்டறை பற்றி?

பாலுமகேந்திரா:- சாகுற வரைக்கும் சினிமால இருக்கணும்,சினிமாவுக்கு எதாவது செய்துட்டு போகணும், அதனால ஆரம்பிச்சதுதான் இந்த ஸ்கூல் வீடு படத்துக்காக பாதி கட்டி முடிச்ச வீடு இது, மறுபடியும்ல தொடர்ந்து முதல் மாடி கட்டினேன், அப்புறம் முழுசா முடிச்சு என்னோட கதை நேரம் படப்பிடிப்பு ரெண்டுமுனு நடந்துது,அப்புறம் renovate பண்ணி இங்க இத ஆரம்பிச்சிட்டேன்.இங்க தமிழ் வழி கல்வி தான், ஒரு வருஷத்துக்கு 12 பேர் தான் " எழுத்து-இயக்கம்-ஒளிப்பதிவு-படத்தொகுப்பு " எல்லாமே கத்து கொடுத்து ஒரு creatorah உருவாக்கணும் அதான் என் ஆசை இங்க இருக்குற 12 பேர் கூ ட நா நெருங்கி பழகுறேன் அதனால அவங்கல நா நல்ல கலைஞர்களா உருவாக்க முடியும். நெறைய பேர் சேர்காததற்க்கு இதுவும் ஒரு காரணம்.அதே மாதிரி இங்க சான்றிதழும் கிடையாது.அவர்கள் வொர்க் தான் பேசும்.

நான்:-சார் எங்க தொலைகாட்சிக்காக ஒரு நேர்காணல் தர முடியுமா ?

பாலுமகேந்திரா:-இப்ப வேண்டாமே எல்லாம் பேசி பேசி சலிச்சுபோச்சு அப்புறம் ஒரு நாள் கண்டிப்பா தரேன்னு சொன்னார்.எங்க நாம விட்ருவோமா இவ்ளோ நேரம் பேசினதே ஒரு குட்டி நேர்காணல் தான??? என்ன நான் சொல்றது !!!!!!!!!!!!!!



என்ன ஒரு பிளான்னிங் இதுதான் legends "டீ தீர்ந்து போச்சு இது என் மைன்ட் வாய்ஸ்" அவர் தற்பொழுது தான் புதிதாக அவர் அழைபேசி உபோயிக்க தொடங்கியிருந்ததார். அவர் ரசிகை ஒருவர் கொடுத்ததால் மட்டுமே அதை பயன்படுத்தி வந்தார்.அவர் கையாலேயே என் அழைபேசி என்னையும் வாங்கி எழுதி வைத்து கொண்டார்.வாங்க சுத்தி காட்டுறேன்னு சொல்லி இரண்டு மாடிகளிலும் ஒவ்வொரு அறையா அவர் விளக்கி சொல்ல பின்னாடியே நாங்க போனோம்.அவர் வீடு முழுக்க உலக திரைப்படங்களின் ஜாம்பவான்கள் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்,சத்யஜித் ரே,புகைப்படங்கள். பாலுமகேந்திரா படத்தின் கதாநாயகர்கள் கதாநாயகிகள்,அவர் படத்தின் வொர்க்கிங் ஸ்டில்ஸ்,என எல்லாமே கருப்பு வண்ண புகைப்படங்கள் தான், அழகாக போட்ரைட் செய்யப்பட்டது. அந்த "சினிமா பட்டறை" முழுக்க ஒரு புகைப்பட அருங்காட்சியகம் போல் ஜொலித்தது.

கடைசியில தயங்கிக்கிட்டே உங்க கூட ஒரு புகைப்படம் எடுத்துக்கலாமானு கேட்டேன். கேமரா வச்சுருக்கிங்களானு? கேட்டார், நா நண்பர் கிட்ட வாங்கி கொண்டு வந்திருந்த ஒரு ஹன்டி காம எடுத்து காட்டினேன். உடனே என்ன நெனைச்சாரோ அவர் உதவியாளர கூப்பிடார். ஒரு ஸ்டில் கேமரா வந்துச்சு. வெளிய போலோமனு கேட்டார் சரின்னு தலையாட்டுனேன் நாங்க முனு பேரு நின்னோம் என்ன மட்டும் தனியா நிக்க வச்சு அவர் கையாள டயிட் குளோசப்ல ஒரு போட்டோ எடுத்தார். அவர் கையாள எடுக்கிற திரைப்படம்ல நடிக்க கிடைக்காத வாய்ப்பு நிழற்படத்திளியாவது கிடைச்சது, எனக்கு ரொம்ப சந்தோசம்,அப்புறம் எல்லோரும் சேர்ந்து அவரோட உதவியாளர் எடுக்க போறார் ஒரு படம் "முடிஞ்ச வரைக்கும் டயிட் ஷாட்ல எடு" அப்புடின்னு சொன்னார்.அதான் பாலுமகேந்திரா.

கிளிக் "ஒரு சந்தோஷ நிமிடம் பதிவானது".










இடமிருந்து வலம்- 1 - முன் பதிவுகளில் அறிமுகப்படுத்திய திரு.பிரசாத் (இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் கூட), 2 -நண்பர் ராஜா, 3 - திரு.பாலுமகேந்திரா , 4 - நானே தான் ...


கை குடுத்து வழி அனுப்பி வச்சார். "என் வாழ்நாளில் எனக்கு இன்று ஏற்பட்டது போன்ற ஒரு பெருமித உணர்வை இன்னொரு நபருக்கு ஒருநாள் என்னிடம் ஏற்படச் செய்ய வேண்டும்.அதற்காக உழைக்க தொடங்க வேண்டும் என்கிற அணையா கனவோடு நான் வெளியேறினேன்".

'அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத் தொடக்க விழா

'எங்கள் ஊருக்கு சினிமா வந்தது. எங்கள் ஊர் சினிமா வில் வந்திருக்கிறதா? வந்தது! பாரதிராஜா வந்த பிறகு வந்தது. எங்கள் ஊரை சினிமாவுக்குக் கொண்டுவந்த பாரதிராஜா, இன்று சினிமா உலகத்தையே எங்கள் ஊருக்குக் கொண்டுவந்திருக்கிறார்!'' - தேனி அல்லிநகர மக்களின் உணர்வை வைரமுத்து அவ்வளவு அழகாக வெளிப்படுத்தினார்!




'அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத் தொடக்க விழா. தேனியில் இருந்து வடமேற்குத் திசையில் நான்கு கி.மீ. தூரம் கிராமத்துச் சாலையில் பயணித்தால், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம். அங்கே இருக்கும் வீரப்ப அய்யனார் கோயில்தான் ஸ்பாட். பாலசந்தர், பாலு மகேந்திரா, மணிரத்னம், பாக்யராஜ், அகத்தியன் எனத் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் கள் அனைவரும் ஆஜர்.
வழியெங்கும் கள்ளிச்செடிகள், கூரை வீடுகள், மாட்டு வண்டிகள், வைக்கோல் படப்பு, தண்டட்டிக் கிழவி, கோவணக் கிழவர் என்று பாரதிராஜா சினிமாவின் 'கிராமம்’. அய்யனாருக்குக் கிடா வெட்டி, பூஜை நடத்தப்போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்தவர்களுக்குக் காத்திருந்தது ஆச்சர்யம். மேடையில் இருந்த திரையுலகப் பிரம்மாக்களுக்குத் தீபாராதனை காட்டி, பூஜை செய்த கிராமத்துப் பூசாரி, பார்வையாளர் களுக்கும் தீபாராதனை காட்டியபோது செம கிளாப்ஸ்.

மகள் கார்த்திகாவுடன் வந்த ராதா, பாக்யராஜுக்கு அருகில் அமர்ந்துகொண்டார். ''பிறந்த ஊர் எல்லாத்துக்கும் ஒண்ணுன்னா, எனக்கு மட்டும் ரெண்டு... கோயம்புத்தூர் ஒண்ணு. இன்னொண்ணு இந்த அல்லி நகரம். நான் இங்க கெஸ்ட்டா வரலை... ஃபர்ஸ்ட் படத்துக்கு எப்படி அசிஸ்டென்ட்டா வந்தேனோ, அப்படித்தான் இப்பவும் வந்திருக்கேன்!'' என்று குருபக்தி யைக் காட்டினார் பாக்யராஜ்.
மைக் பிடித்த குஷ்பு, பாரதிராஜாவின் கிராமத்துப் படம் ஒன்றில் தான் நடிக்க ஆசைப்பட்டதைச் சொன்னார். அதற்குப் பதில் அளித்த பாரதிராஜா, ''ரெட்டைச் சடையும், தாவணியும் போட்டுக்கிட்டு வா... நடிக்கவைக்கிறேன். காந்திமதியையே பாவாடை தாவணியில் காட்டின ஆளு நான்!'' என்று சொல்ல... குஷ்பு முகத்தில் வெட்கச் சிவப்பு!
இயக்குநர் பாலுமகேந்திரா, ''இன்று பாரதி 44-வது படத்தை இயக்கவிருக்கிறார். அப்படிப் பார்த்தால், அவருக்கு 44 வயதுதான். இன்னும் 56 வயது இருக்கிறது. இன்னும் 56 படங்களை எடுப்பார். அதே நேரத்தில், எனக்கு 18 வயதுதான் ஆகிறது என்பதைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்!'' என்று கலகலப்பூட்டினார்.

'ரத்தின’ச் சுருக்கமாகப் பேசுவார் என்று தெரிந்ததால், மணிரத்னம் பேசும்போது ஆரவாரத்தை அடக்கி அமைதியானது கூட்டம். ''30 வருஷமா பாரதிராஜா தாக்கம் இல்லாம ஒரு படமும் வந்தது கிடையாது. இன்னும் சொல்லப்போனால், அடுத்து வருகிற படங்களும் அவருடைய தாக்கத் தோடுதான் வெளிவரும்!'' என்று முடித்துக் கொண்டார்.
''பாரதிராஜாவின் முதல் ரசிகன் நான் தான். சும்மா சொல்லவில்லை. '16 வயதினிலே’ படம் வெளியாகும் முன்பே ப்ரிவியூ பார்த்துவிட்டு, அவருக்குப் பாராட்டுக் கடிதம் எழுதியிருந்தேன்!'' என்று சிலாகித்தார் பாலசந்தர்.
''கலை என்ற பெயரால், எழுத்து என்ற பெயரால், புத்தகம் என்ற பெயரால், இசை என்ற பெயரால், இந்த மண்ணின் கலாசாரத்தை நாம் சுரண்டிப் பதிவு செய்திருக்கிறோம். இந்த மக்களிடம் இருந்து நீங்களும், நானும், இளையராஜாவும் எவ்வளவோ எடுத்திருக்கிறோம். ஆனால், என்ன கொடுத்திருக்கிறோம்? மக்களே! எங்கள் ஆயுள் தீருவதற்குள் உங்கள் குழந்தைகளின் கல்விக்கு நாங்கள் ஒரு அறக்கொடை செய்வோம்.

(பாரதிராஜாவைப் பார்த்து...) நீங்களும் நானும் சேர்ந்து நம் மக்களுக்காக ஒரு கல்வி அறக்கட்டளையைத் தொடங்கு வோம். அதற்கு என் பங்களிப்பாக 5 லட்சமும் என் நண்பர் கோவில்பட்டி நாகஜோதி பங்காக 10 லட்சமும் தருகிறோம். இது தவிர, இந்தப் படத்துக்குப் பாட்டெழுத பாரதிராஜா தருகிற மிகப் பெரிய தொகை யையும் சேர்த்துக்கொள்கிறேன். இப்போது சொல்லுங்கள்... நீங்கள் எவ்வளவு பங்களிப்பு தரப்போகிறீர்கள்?' என்று கேட்டார் வைரமுத்து.
உடனே பாரதிராஜா, ''நீ விடாக்கண்டன்னா... நான் கொடாக்கண்டன்யா. நான் என்னைக்கு உனக்குச் சம்பளம் தந்திருக்கேன்? நீ மிகப் பெரிய, விலை மதிப்பு இல்லாத கவிஞன்யா. காசு பணத்தை வெச்சி உன்னை அவமானப்படுத்த நான் விரும்பலை!'' என்றார் சிரித்தபடி.
விடாத வைரமுத்து, ''பாரதிராஜாவுக்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்ள நான் தயார். தயவுசெய்து என்னை மிக அதிகமாக அவமானப்படுத்தும்படி பாரதிராஜாவைக் கேட்டுக்கொள்கிறேன்!'' என்று சொல்ல... ஒரே சிரிப்பலை.
இறுதியில் 5 லட்சம் கொடுப்பதாகச் சொன்னார் பாரதிராஜா. அப்போது எழுந்த பாலுமகேந்திரா, 'திரையுலகின் மாடி வீட்டு ஏழையான நானும் இந்த அறக்கட்டளைக்கு என்னால் முடிந்த தொகையாக ரூபாய் 10 ஆயிரத்தை வழங்குகிறேன்!'' என்று அறிவித்த போது, நெகிழ்ந்துவிட்டார் வைரமுத்து.
''நான் ஏன் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன் தெரியுமா? இது என் தாத்தனுக்கும் தாத்தன் பார்த்த மரம். இங்கே வேட்டைக்கு வந்திருக்கேன். இங்கேமேய்ஞ் சுக்கிட்டு இருக்கிற ஆட்டுல களவாணித் தனமாப் பால் கறந்து குடிச்சிருக்கேன். நான் முதல்ல இந்த வனாந்திரத்தைப் படிச்சேன். அதுக்கு அப்புறம்தான் உலகத்தைப் படிச்சேன். நான் இன்னும் கொஞ்சம் வயசாகி, தளர்ந்து போயிருந்தால் யார் விழாவுக்குக் கூப்பிட் டாலும் தவிர்த்திருப்பேன். ஆனால், பால சந்தரும் பாலுமகேந்திராவும் தங்கள் உடல் நலத்தைப் பற்றிக்கூட கவலைப்படாமல் இங்கே வந்திருக்கிறார்கள். இங்கே வந்துள்ள தமிழ்த் திரையுலகினருக்கு ஒட்டுமொத்தமாக நன்றி தெரிவிக்கும் வகையில், இயக்குநர் பாலசந்தரின் கால்களில் விழுந்து வணங்குகிறேன்!'' என்று கூடியிருந்த அத்தனை விருந்தினர்களையும் நெகிழவைத்தார் பாரதிராஜா!

அவன் இவன் பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய டைரக்டர் பாலுமகேந்திரா




அது ஒரு கனாக்காலம் போன்ற படங்களை இயக்கி, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை கவர்ந்திழுத்த டைரக்டர் பாலுமகேந்திரா தனக்கு இருபத்தாறு வயதுதான் ஆகிறது; நான் வெள்ளை டை அடித்திருக்கிறேன், என்று கூறினார். டைரக்டர் பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் அவன் இவன் பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய டைரக்டர் பாலுமகேந்திரா, பாலாவும், நா.முத்துக்குமாரும் என் சிஷ்யர்கள். என் பிள்ளைகள். பாலா என் மூத்த மகன். அவனுக்கு நான் ரசிகன். விஷால், நல்ல நடிகர். அவருடைய நிறம் எனக்கு பிடிக்கும். பொதுவாகவே எனக்கு கறுப்பு ஆண்களையும், கறுப்பு பெண்களையும் ரொம்ப பிடிக்கும். கறுப்புதான் அழகு. கறுப்பு மீது எனக்கு காதல் உண்டு. என் கதாநாயகி அம்பிகா இங்கே இருக்கிறார். அவரை என் கதாநாயகி என்று குறிப்பிடுவதில் தப்பு இல்லை. என் டைரக்ஷனில், ஓளங்கள் என்ற படத்தில் அம்பிகா நடித்து இருக்கிறார். பிரபா இங்கே பேசும்போது, என்னை பெரியவர் என்று குறிப்பிட்டார். நான் வயதானவன் அல்ல. எனக்கு இருபத்தாறு வயதுதான் ஆகிறது. எல்லோரும் கறுப்பு டை அடித்துக்கொள்வார்கள். நான், வெள்ளை டை அடித்துக்கொள்கிறேன். அவ்வளதான், என்றார்.

நிகழ்ச்சியில், டைரக்டர் பாலா, நடிகர்கள் விஷால், ஆர்யா, ஆர்.கே, ஜி.எம்.குமார், நடிகைகள் அம்பிகா, ஜெயப்பிரபா, பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா, வசனகர்த்தா எஸ்.ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். எண்டர்டைன்மென்ட் ரங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாலுமகேந்திராவுக்கு ஒரு பாட்டு திருவிழா











தமிழ்சினிமா பட்டுப்புடவை என்றால் அதிலிருக்கும் ஜரிகைதான் பாலுமகேந்திரா, மகேந்திரன், பாலசந்தர், பாரதிராஜா போன்றவர்கள் எல்லாம். அப்படியொரு ஜரிகைக்குதான் விழா எடுக்கப் போகிறார்கள் இப்போது. இலங்கை மட்டக்களப்பு அருகே அமர்தகழி என்ற ஊரில் பிறந்தவர் பாலுமகேந்திரா. இவரது அண்டை வீட்டுக்காரர்தான் கவிஞர் காசி ஆனந்தன். பாலுமகேந்திரா இயக்கிய முதல் படமான அழியாத கோலங்கள் படத்தில் வரும் மூன்று சிறுவர்களில் ஒருவர் காசி ஆனந்தன் என்பதை இப்போது கேட்கும் போது பெரும் வியப்பாக இருக்கிறதல்லவா?




இது போன்ற பாலுமகேந்திராவை பற்றிய சின்ன சின்ன சுவாரஸ்யமான தகவல்களை சொல்லி அவருக்கு பாராட்டு திருவிழாவையும், பாட்டு திருவிழாவையும் நடத்தப் போகிறது ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸ். இந்த அமைப்பின் தலைவர் சிவசங்கர், மூத்த கலைஞர்களை தேடி தேடி சிறப்பித்துக் கொண்டி ருக்கிறார். அண்மையில் எல்.ஆர்.ஈஸ்வரிக்கு இவர் நடித்திய மாபெரும் பாட்டு திருவிழாவை பார்த்துவிட்டு தான் தனது படத்தில் பாட அழைத்தாராம் சிம்பு.

மரம் பழசாக இருந்தாலும் கிளையை புதுசாக வைத்துக் கொள்வதற்கு தேவை புத்துணர்ச்சி. அது இப்பவும் இருக்கிறது பாலுமகேந்திராவுக்கு. தமிழ்சினிமாவின் முக்கியமான மேடைகளில் எல்லாம் மனப்பூர்வமாக கலந்து கொள்கிற இந்த கலைஞனுக்கு திரையுலகத்தின் முக்கியஸ்தர்கள் கூடி நடத்தப்போகிற விழாவாக இருக்கும் இந்த பாலுமகேந்திரா ஹிட்ஸ் என்ற நிகழ்ச்சி.

இதில் பாலுமகேந்திரா படத்தில் இடம்பெற்ற பாடல்களை மட்டும் மேடையில் பாடவிருக்கிறார்கள்.

4-12-11 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு காமராஜர் அரங்கத்தில் இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். குருநாதரை கவுரவிக்க அவரது சிஷ்யர்களான பாலா, அறிவுமதி, சீமான், வெற்றிமாறன், சீனு ராமசாமி, சுரேஷ், சுகா போன்றவர்கள் வரவிருக்கிறார்களாம்.
04/12/2011 

பாலுமகேந்திரா பற்றி அறியாத விடயங்களை காண ஓடி வாருங்கள்


November 28th, 2011 12:01 AM


பாலுமகேந்திராவின் படப் பாடல்கள் என்றுமே தனித்த சிறப்பு மிக்கவை. காரணம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை… இசைஞானி இளையராஜா.

அழியாத கோலங்கள் (சலீல் சவுத்ரி) என்ற ஒரு படம் தவிர, பாலு மகேந்திராவின் மீதி எல்லா படங்களுக்கும் ராஜாதான் இசையமைப்பாளர்.

முதல்முறையாக பாலு மகேந்திராவின் பட பாடல்களை மட்டுமே பாடும் கச்சேரி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார், தமிழ் சினிமாவின் தலைசிறந்த கலைஞர்களை தேடிப் பிடித்து பாராட்டு நடத்துவதில் தனி இடம்பிடித்துவிட்ட ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸ் தலைவர் சிவசங்கர்.

பாலுமகேந்திரா ஹிட்ஸ் என்ற தலைப்பில் அவர் படங்களில் வந்த மறக்கமுடியாத பல பாடல்களைப் மேடையில் பாடவிருக்கிறார்கள் எஸ்பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பிரபல பாடகர்கள்.

4-12-11 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு காமராஜர் அரங்கத்தில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். குருநாதரை கவுரவிக்க அவரது சிஷ்யர்களான பாலா, அறிவுமதி, சீமான், வெற்றிமாறன், சீனு ராமசாமி போன்றவர்கள் வரவிருக்கிறார்களாம்.

பாட்டோடு நின்றுவிடாமல், பாலு மகேந்திரா குறித்த பல சுவையான தகவல்களை மேடையில் சொல்லி சுவாரஸ்யம் தரவிருக்கிறார்கள்.

இலங்கை மட்டக்களப்பு அருகே அமர்தகழி என்ற ஊரில் பிறந்தவர் பாலுமகேந்திரா. இவரது அண்டை வீட்டுக்காரர்தான் கவிஞர் காசி ஆனந்தன். பாலுமகேந்திரா இயக்கிய முதல் படமான அழியாத கோலங்கள் படத்தில் வரும் மூன்று சிறுவர்களில் ஒருவர் காசி ஆனந்தன் என்றால் நம்ப முடிகிறதா.

உங்களுக்குத் தெரியாத இதுபோன்ற சுவாரஸ்யமான சமாச்சாரங்களை இந்த விழாவில் ரசிகர்களுக்கு பந்தி வைக்கப் போகிறார்கள்.

பாலுமகேந்திராவின் பாராட்டு விழாவில் பாலா04/12/2011

சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாலுமகேந்திராவுக்கு, பாராட்டு விழா நடத்த போகிறார்கள். தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் பாலுமகேந்திரா. இவரது படங்கள் அனைத்துமே தலைசிறந்த படைப்புகள் தான். அதிலும் இவரது படப்பாடல்கள் தனி சிறப்பு வாய்ந்தவை. இசைஞானி இளையராஜா தான் இவரது படங்கள் அனைத்திற்கும் இசையமைத்து இருப்பார்.
இந்நிலையில் பாலுமகேந்திராவின் படப்பாடல்களை மட்டும் தனியாக தொகுத்து, பாலுமகேந்திரா ஹிட்ஸ் என்ற தலைப்பில் ஒரு பாட்டு திருவிழாவையும், பாராட்டு திருவிழாவையும் நடத்த போகிறார்கள். ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸ் அமைப்பின் தலைவர் சிவசங்கர், இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். மேலும் விழாவில் பாட மூத்த கலைஞர்களை தேடி, தேடி சிறப்பித்துக் கொண்டிருக்கிறார். பாட்டோடு மட்டும் நின்றுவிடாமல், பாலு மகேந்திரா குறித்த பல சுவையான தகவல்களை மேடையில் சொல்லி சுவாரஸ்யம் தரவிருக்கிறார்கள்.
டிசம்பர் 4ம் தேதி ஞாயிறு, மாலை 6.30 மணிக்கு காமராஜர் அரங்கத்தில் இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த விழாவில் தங்களது குருநாதரை கவுரவிக்க அவரது சிஷ்யர்களான டைரக்டர் பாலா, கவிஞர் அறிவுமதி, சீமான், வெற்றிமாறன், சீனு ராமசாமி, உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்

Thursday 1 December 2011

பாலு மகேந்திர அவர்கள் விஜய் டிவி க்கு அளித்த பேட்டி 7


பாலு மகேந்திர அவர்கள் விஜய் டிவி க்கு அளித்த பேட்டி 6


பாலு மகேந்திர அவர்கள் விஜய் டிவி க்கு அளித்த பேட்டி 5


பாலு மகேந்திர அவர்கள் விஜய் டிவி க்கு அளித்த பேட்டி 4


பாலு மகேந்திர அவர்கள் விஜய் டிவி க்கு அளித்த பேட்டி 3


பாலு மகேந்திர அவர்கள் விஜய் டிவி க்கு அளித்த பேட்டி 2


பாலு மகேந்திர அவர்கள் விஜய் டிவி க்கு அளித்த பேட்டி