தமிழ் இளைஞன் தோற்கக் கூடாது என்பதற்காக ஓட்டுப் போட்டேன் பாலு மகேந்திரா !
February 25, 2009
தமிழ் இளைஞன் தோற்கக் கூடாது என்பதற்காக தேசிய விருது தேர்வில் ரஹ்மானுக்கு ஓட்டுப் போட்டேன் என்றார் இயக்குனர் பாலு மகேந்திரா.
ஸ்ரீகாந்த், நமீதா, விவேக் நடிப்பில் ராஜேஸ்வர் இயக்கியுள்ள படம் “இந்திர விழா’. இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ் விழாவில் இயக்குநர் பாலு மகேந்திரா பேசியதாவது:
ஏ.ஆர்.ரஹ்மானின் “ரோஜா’வும், இளையராஜாவின் “தேவர் மகனும்’ ஒரே நேரத்தில் தேசிய விருது தேர்வுக்கு வந்தன. அப்போது என் தலைமையில்தான் தேர்வுக் குழு செயல்பட்டது.
இரண்டு படங்களையும் பார்த்தேன், நன்றாக இருந்தது. ஓட்டெடுப்புக்கு பின் இளையராஜாவுக்கு 7 வாக்குகளும், ரஹ்மானுக்கு 7 வாக்குகளும் கிடைத்திருந்தன. தேர்வுக் குழுவின் தலைவர் என்ற முறையில் என் ஓட்டை பொறுத்தே ரஹ்மானா, இளையராஜாவா என உறுதி செய்யப்பட வேண்டிய நிலை.
இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன் “என் கடவுளே எனக்கு துணை புரிந்து அருள்வாய்’ என இறைவனை வேண்டி கொண்டு, முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்த தமிழ் இளைஞன் தோற்று விடக் கூடாது என்பதற்காக என்னுடைய ஓட்டை ரஹ்மானுக்கு கொடுத்திருந்தேன்.
விருது வழங்கும் விழாவில் மணிரத்னம் ரஹ்மானை “குட்டி பையா’ என அழைத்தது இன்னும் ஞாபகமிருக்கிறது. எனக்கு அந்த நிகழ்வு பூரிப்பை ஏற்படுத்தியது. இப்போது ரஹ்மானின் ஆஸ்கர் காட்சிகளை டி.வி.யில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ரஹ்மானின் “சின்ன சின்ன ஆசை’ எனக்கு மிகவும் பிடித்த பாடலாகும் என்றார்.
வைரமுத்து: தமிழ் சினிமா, இந்திய சினிமாவுக்கு தலைமை தாங்கவும் இந்திய சினிமா, உலக சினிமாவுக்கு தலைமை தாங்கவும் கூடிய நிலை ரஹ்மானால் வந்திருக்கிறது.
இந்திய கலாசாரத்தை, தமிழ் கலாசாரத்தை, சோமாலியர்களின் பஞ்சத்தை படமாக எடுங்கள். ஏன் இந்தியர்களிடம் வாழ்க்கை இல்லையா, தமிழர்களிடம் கலாசாரம் இல்லையா? அதையெல்லாம் சினிமாவாக எடுங்கள். அதற்கான ராஜ கதவைத்தான் ரஹ்மான் நமக்குத் திறந்து விட்டிருக்கிறார் என்றார்
February 25, 2009
தமிழ் இளைஞன் தோற்கக் கூடாது என்பதற்காக தேசிய விருது தேர்வில் ரஹ்மானுக்கு ஓட்டுப் போட்டேன் என்றார் இயக்குனர் பாலு மகேந்திரா.
ஸ்ரீகாந்த், நமீதா, விவேக் நடிப்பில் ராஜேஸ்வர் இயக்கியுள்ள படம் “இந்திர விழா’. இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ் விழாவில் இயக்குநர் பாலு மகேந்திரா பேசியதாவது:
ஏ.ஆர்.ரஹ்மானின் “ரோஜா’வும், இளையராஜாவின் “தேவர் மகனும்’ ஒரே நேரத்தில் தேசிய விருது தேர்வுக்கு வந்தன. அப்போது என் தலைமையில்தான் தேர்வுக் குழு செயல்பட்டது.
இரண்டு படங்களையும் பார்த்தேன், நன்றாக இருந்தது. ஓட்டெடுப்புக்கு பின் இளையராஜாவுக்கு 7 வாக்குகளும், ரஹ்மானுக்கு 7 வாக்குகளும் கிடைத்திருந்தன. தேர்வுக் குழுவின் தலைவர் என்ற முறையில் என் ஓட்டை பொறுத்தே ரஹ்மானா, இளையராஜாவா என உறுதி செய்யப்பட வேண்டிய நிலை.
இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன் “என் கடவுளே எனக்கு துணை புரிந்து அருள்வாய்’ என இறைவனை வேண்டி கொண்டு, முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்த தமிழ் இளைஞன் தோற்று விடக் கூடாது என்பதற்காக என்னுடைய ஓட்டை ரஹ்மானுக்கு கொடுத்திருந்தேன்.
விருது வழங்கும் விழாவில் மணிரத்னம் ரஹ்மானை “குட்டி பையா’ என அழைத்தது இன்னும் ஞாபகமிருக்கிறது. எனக்கு அந்த நிகழ்வு பூரிப்பை ஏற்படுத்தியது. இப்போது ரஹ்மானின் ஆஸ்கர் காட்சிகளை டி.வி.யில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ரஹ்மானின் “சின்ன சின்ன ஆசை’ எனக்கு மிகவும் பிடித்த பாடலாகும் என்றார்.
வைரமுத்து: தமிழ் சினிமா, இந்திய சினிமாவுக்கு தலைமை தாங்கவும் இந்திய சினிமா, உலக சினிமாவுக்கு தலைமை தாங்கவும் கூடிய நிலை ரஹ்மானால் வந்திருக்கிறது.
இந்திய கலாசாரத்தை, தமிழ் கலாசாரத்தை, சோமாலியர்களின் பஞ்சத்தை படமாக எடுங்கள். ஏன் இந்தியர்களிடம் வாழ்க்கை இல்லையா, தமிழர்களிடம் கலாசாரம் இல்லையா? அதையெல்லாம் சினிமாவாக எடுங்கள். அதற்கான ராஜ கதவைத்தான் ரஹ்மான் நமக்குத் திறந்து விட்டிருக்கிறார் என்றார்

No comments:
Post a Comment