Wednesday, 16 November 2011

கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க படங்களை தந்தவர்கள் பாலு மகேந்திராவின் வாரிசுகளே

பாலா (சேது,நந்தா,பிதாமகன்)

அமீர் (மௌனம் பேசியதே,ராம், பருத்தி வீரன்)

ராம் (கற்றது தமிழ்)

வெற்றி மாறன் (பொல்லாதவன்)

சசி (சுப்ரமனியபுரம்)

பாடலாசிரியர் முத்துக்குமார் இவரிடம் உதவியாளராய் இருந்துவிட்டு பின்னர் பாட்டெழுத சென்று விட்டார்.

உலகப் படங்களை பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது என தான் செய்யும் எல்லாவற்றையும் உதவியாளர்களுடன் சேர்ந்தே செய்வார் இவர். அதனால் அவரின் ரசனை உதவியாளர்களிடம் படிந்து விடுகிறது. மாற்று சிந்தனை அந்த குழுவில் குறைவாகவே இருக்கும். மேற்கூறிய எல்லா படங்களிலும் அவரின் தாக்கம் இருப்பதை அறியலாம். 20 ஆண்டுகளுக்குப் பின்னரே இவரால் உதவியாளர்களுடன் ஓருயிர் பல உடலாக இருக்க முடிந்தது. தன் வயதொத்த ஆட்களுடன் ஆரம்பத்தில் ஓத்துபோக முடியவில்லை எனலாம். ஒரு மூத்த அண்ணன்/தந்தை ஸ்தானத்தில் இருந்து இளைஞர்களை இவர் இப்போது வழிநடத்துகிறார்.

இனிவரும் காலங்களில் பாலு மகேந்திராவின் வாரிசுகள் தலைமுறையை உருவாக்கலாம்

No comments:

Post a Comment