Monday, 10 October 2011

சொக்கலிங்க பாகவதர்

பாலுமகேந்திரா 1989ல் சந்தியாராகம் என்று வயதான சொக்கலிங்கபாகவதர் வார்க்கை பிரச்சனையை மையபடுத்தி ஒரு படம் எடுத்தார்... அது தமிழின் மாற்று சினிமா...

அந்த படம் தேசிய விருது வாங்கியதோடு சரி... அப்படி ஒரு படம் இருக்கின்றது என்பது கூட பலருக்கு தெரியாது... அதுதான் தமிழ் சினிமா...
ஒரு பேட்டியில் இயக்குனர் பாலா... சந்தியாராகம் சென்னை கலைவாணர் அரங்கில் விருது வழங்கும் விழா நடந்து கொண்டு இருந்தது....அப்போது விழாமுடிந்து வெளியே வந்த சொக்கலிங்க பாகவதர் செல்ல ஆட்டோவுக்கு பைசா கூட இல்லாமல் அவர் ரோட்டில் நடந்து போனதாக ஒருபேட்டியில் பாலா சொல்லி படித்ததாக எனக்கு ஞாபகம்....

விருது வாங்கிய கிழக்கலைஞன் தெருவில் நடந்து போனான்.... சொக்கலிங்க பாகவதர் நடித்த வீடு ,சதிலீலாவதி போன்ற படங்களில் அவருடைய கேரக்டர்கள் சிலாகிக்கபட்டன... அனாலும் அதற்க்கான அங்கீகாரம் சரியாக இல்லை என்பதுதான் வருத்தம்

No comments:

Post a Comment